districts

img

வருமான வரி செலுத்தல் :  விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், டிச.15-  பெரம்பலூர் மாவட்ட அளவிலான முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதனன்று அஸ்வின் கூட்டரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வருமான வரி  அதிகாரி க.சந்திரசேகரன் வரவேற்றார். திருச்சி வருமான  வரி இணை ஆணையர் ஜெ.புவனேஸ்வரி தலைமை வகித்தார். பின்னர் வருமானவரி தொடர்பான சந்தே கங்களுக்கு திருச்சி வருமான வரி அதிகாரி எம்.கண்ணன் விளக்கம் அளித்தார். பெரம்பலூர் வருமானவரி அதிகாரி  உமாமகேஸ்வரி, பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்க தலைவர் ஏகேவி.சண்முக நாதன், தொழிலதிபர்கள், மற்றும் ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.

;